
அமைதியில் இறைவனை – Amaithiyil Iraivanai Lyrics
அமைதியில் இறைவனைக் காணுவோம்
அமர்ந்தே அவர் அன்பைப் பூணுவோம்
சுமைகளை அவர் பதம் போடுவோம்
சோர்வுகள் நீங்கியே வாழுவோம்
1. நம்மாலே எல்லாம் ஆகும் என்று
நம்பியே வாழ்ந்தது போதும் என்று
பெம்மானின் பாதமே பணிந்து நின்று
பேரருள் நாடுாம் வேண்டி நின்று
2. கடந்ததை கடவுள் நினைப்பதில்லை
கணக்குகள் பார்த்துமே கணிப்பதில்லை
நடந்திடும் பாதையில் கூட வந்து
நம் நலம் நாடுவோர் ஏங்கி நின்று