பெந்தேகோஸ்தே நாளில் – Penthokosthae Naalil song lyrics

Deal Score+1
Deal Score+1

பெந்தேகோஸ்தே நாளில் – Penthokosthae Naalil song lyrics

பெந்தேகோஸ்தே நாளில் வந்தவரே
பரிசுத்த ஆவியை தருபவரே – (2)
பாத்திரம் நிரம்பி வழியச்செய்து
எரிந்து பிரகாசிக்க செய்திடுமே – என் (2)

அக்கினியாய் நான் எரியனுமே,
அணையாமல் என்றும் எரியனுமே
ஆண்டவர் இயேசுவுக்காய் எரியனுமே
ஆயுள் முழுவதும் எரியனுமே
ஆண்டவர் இயேசுவுக்காய் எரியனுமே
ஆண்டவர் வருகை வரை எரியனுமே

1) பலத்த காற்றாய் வந்தவரே
பெலத்தினால் என்னை இடைகட்டுமே – (2)
பாவத்தை ஜெயித்து பலத்த சாட்சியாய்
பாரினில் ஜொலிக்க நான் எரியனுமே – (2)

2) அக்கினியைப் போட வந்தவரே
அக்கினியாய் பற்றி எரியச் செய்யும் – (2)
எண்ணெயை ஊற்றி கொழுந்துவிட்டெரிய
எந்நேரமும் என்னை நிரப்பிடுமே – (2)

3) மணவாளனாக மணவாட்டியை
மகிமையில் சந்திக்க வருபவரே – (2)
மறுரூபமாக நான் மாறிடவே என்னை
மங்காத தீபமாய் எரியச் செய்யும் – (2)

https://www.youtube.com/watch?v=qqDSy0MnMkE&ab_channel=SYMWebTV

Akkiniyaai Eriyanumae | New Tamil Christian Song | அக்கினியாய் எரியனுமே

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo