மகிமையானவர் உயர்த்திருப்பவர் -Mahimaiyanavar Uyarnthirupavar
மகிமையானவர் உயர்த்திருப்பவர் -Mahimaiyanavar Uyarnthirupavar
மகிமையானவர் உயர்த்திருப்பவர்
துதி கன மகிமைக்கு பாத்திரர்
உம் நாமமே அதிசயம்
என்றும் மாறா சர்வ வல்லவரே
உம் நாமமே உயர்ந்ததே
என்றென்றுமே ஆராதிக்கிறோம்
என் இயேசுவே
தாயினும் மேலாய் அன்பு வைத்தீர்
கருவினில் இருந்த போது
தெரிந்து கொண்டீர்
வீழ்ந்த இடத்தில் எல்லாம் உயர்த்தி வைத்தீர்
என்றென்றுமே ஜீவிப்பவரே – உம் நாமமே
ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீர்
ஆதியும் அந்தமும் அற்றவர் நீர்
சர்வமும் படைத்திட்ட சற்குரு நீர்
என்றென்றுமே உயர்த்தி பாடுவோம் – உம் நாமமே