வழியை காண்கிறேன் நல்ல – Vazhiyai Kaankireen Nalla Lyrics

Deal Score0
Deal Score0

வழியை காண்கிறேன் நல்ல – Vazhiyai Kaankireen Nalla Lyrics

வழியை காண்கிறேன் நல்ல
வாழ்வ்வை காண்கிறேன்
கண்கள் உம்மை காணட்டும் இயேசுநாதா
கண்ணீர் உமதாகட்டும்

1) உம்மைப் போலவே என்னையும் மாற்றிவிடும்
உம்மைப் போலவே என்னையும் மாற செய்யும்
தேவை நீர் ஆகட்டும் இயேசுநாதா
தேடுதல் நிறைவாகட்டும்

2) எந்தன் பாவங்கள் சாபங்கள் தீர்த்தீறைய்யா
எந்தன் பாவங்கள் ரோகங்கள் சுமந்தீரய்யா
சிலுவை மீதினிலே இயேசுநாதா
சிந்திய இரத்தத்தினால்

3) எனக்காகவே யாவையும் செய்தீரய்யா
எனக்காகவே யாவையும் செய்வீரய்யா
எண்ணம் நீராகட்டும் இயேசுநாதா
ஏக்கம் நிறைவேறட்டும்

4) எந்தன் வாழ்வின் ஆதாரம் நீர்தானைய்யா
எந்தன் வாழ்வின் ஆதாரம் நீரே ஐயா
ஜீவன் நீராகட்டும் இயேசுநாதா
ஜீவியம் ஜெயமாகட்டும்

Vazhiyai Kaankireen Nalla Lyrics in English

Vazhiyai Kaankireen Nalla
Vaazhvvai Kaankireen
Kankal Ummai Kaanaddum yesunaathaa
Kanniir Umathaakaddum

1) Ummaip Poolavee Ennaiyum Maarrividum
Ummaip Poolavee Ennaiyum Maara Seyyum
Theevai Neer Aakaddum yesunaathaa
Theeduthal Niraivaakaddum

2) Enthan Paavangkal Saapangkal Theerththeeraiyyaa
Enthan Paavangkal Rookangkal Sumantheerayyaa
Siluvai Miithinilee yesunaathaa
Sinthiya Iraththaththinaal

3) Enakkaakavee Yaavaiyum Seytheerayyaa
Enakkaakavee Yaavaiyum Seyviirayyaa
Ennam Neeraakaddum yesunaathaa
Eekkam Niraiveeraddum

4) Enthan Vaazhvin Aathaaram Neerthaanaiyyaa
Enthan Vaazhvin Aathaaram Neeree Aiyaa
Jiivan Neeraakaddum yesunaathaa
Jiiviyam Jeyamaagtum

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துதல். இந்த பாடலை கேட்கிற உங்களுக்கு ஆண்டவர் சொல்கிறார் “நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது “. ஆண்டவரையே நம்பி இருக்கிற உங்கள் நம்பிக்கை ஒரு நாளும் வீணாகாது . அநேக பிரச்சனைகள் குழப்பங்களுக்கு வழி இல்லையே என்ற சூழ்நிலையில் இந்த பாடலை கேட்பீர்கள் என்றால் உங்களுக்கு சொல்கிறேன் ” ஆண்டவரே உங்களுக்கு வழியாய் இருந்து உங்கள் வாழ்க்கைக்கு துணையாய் இருந்து உங்களை நடத்துவார் “. நான் சிறைச்சாலையில் இருந்த போது சரீர பெலவீனத்தின் போதும் அங்கு இருக்கிற மற்றவர்களுக்காய் ஜெபித்தபொழுது ஆண்டவர் அவர்களை சிறைச்சாலையில் இருந்து விடுதலையாகினார் , அநேகருக்கு அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்தார் .அப்பொழுது நான் ஆண்டவரிடத்தில் கேட்டேன் ஆண்டவரே என்னிடத்தில் ஜெபித்துக்கொள்கிறவர்களுக்கு அநேக நன்மைகள் செய்கிறீர் எனக்கு எப்பொழுது ஒரு நண்மை நடக்கும் என்றபோது ஆண்டவர் சொன்னார் “நானே உனக்கு வழியும் , வாழ்க்கையுமாய் இருக்கிறேன் ” என்றார் . இந்த வரிகள் தான் இப்போது உங்கள் கையில் பாடலாய் இருக்கிறது . வழியை காண்கிறேன் வாழ்வை காண்கிறேன் என்று சொல்லி துதிக்கும் போது ஆண்டவர் ஒரு பெரிய சமாதானத்தை எனக்கு கட்டளையிட்டார் …நீங்களும் ஆண்டவரை விசுவாசித்து இந்த பாடலை அனுதினமும் பாடும் போது ஆண்டவர் கிரியை செய்வார், உங்கள் நம்பிக்கை வீண் போகாது ..கர்த்தர்தாமே உங்களை ஆசிர்வதித்து காப்பாராக. ஆமென் .
தேவ பணியில் Boaz

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo