அன்புள்ள ஸ்வாமி – Anbulla swami

Deal Score+3
Deal Score+3

அன்புள்ள ஸ்வாமி – Anbulla swami

1.அன்புள்ள ஸ்வாமி, நீர் நிர்ப்பந்தமாக
மரிக்கத் தீர்க்கப்பட்ட தேதுக்காக?
நீர் என்ன செய்தீர், தேவரீரின் மீது
ஏன் இந்தத் தீது?

2.வாரால் அடிப்பட்டு, எண்ணமற்றீர்,
குட்டுண்டு முள் முடியும் சூட்டப்பட்டீர்;
பிச்சுண்கத் தந்து உம்மைத் தூக்கினார்கள்,
வதைத்திட்டார்கள்.

3.இவ்வாதை யாவும் உமக்கெதினாலே
உண்டாயிற்று? ஐயோ, என் பாவத்தாலே;
அதும்மை, ஸ்வாமி, இத்தனை அடித்து
வதை செய்தது.

4.மா ஆச்சரியம், கர்த்தர் சாக வாரார்,
நல் மேய்ப்பர் மந்தைக்காக ஜீவன் தாரார்,
அடியார் தப்பக் குற்றமற்ற மீட்பர்
கடனைத் தீர்ப்பர்.

5.ஆனாலும் ஒன்று உமக்கேற்றிருக்கும்;
நான் உம்மைப்பற்றி, யாவையும் வெறுக்கும்
கருத்தாய்ப் பாவ இச்சையை வேர் பேர்க்கும்
பண் உமக்கேற்கும்.

6.இதற்கும் என் சாமர்த்தியம் போதாது,
பழைய துர்க்குணம் என்னால் நீங்காது;
நீர் உமதாவியை அளித்துவாரும்
பலத்தைத் தாரும்.

7.அப்போ நான் உமதன் நிறைந்து,
பூலோகக் குப்பைமேல் வெறுப்படைந்து,
என் நெஞ்சை உமக்குண்மையாய்க் கொடுக்கும்
பலம் இருக்கும்.

8.பரகதியிலே நான் வைக்கப்பட்டு
கெலிக்கும்போதெல்லாக் குறைவுமற்று
எப்போதும் உம்மை, இயேசுவே, துதிப்பேன்,
இஸ்தோத்திரிப்பேன்.

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo