Arutkadalae Varanthara Ithu Samayamae – அருட்கடலே வரந் தர இது சமயமே

Deal Score0
Deal Score0

பல்லவி

அருட்கடலே, வரந் தர இது சமயமே;
ஐயனே, அருள் தாரும்.

சரணங்கள்

1. சிரந்தனில் இறங்கிடும் புறாவுரு ஆவியே,
கரங்களில் தாசனைக் காத்திடும், தேவா. – அருட்

2. பன்னிரு சீஷரைப் பண்பாகத் தெரிந்தீரே,
உன்னத ஆவியால் உண்மையாய்ப் பிழைக்க. – அருட்

3. அன்போடு யேசுவை ஆவியோடு பேச,
இன்புறு வரங்களை இவர்க்கின்றே ஈய. – அருட்

4. திரியேக தேவா, திருச்சபை பெருக,
அறிவுட னாளும் அன்பர் கோனாக. – அருட்

5. அந்தம் ஆதியில்லா அல்பா ஒமேகாநமா,
சந்ததம் வாழ, சபைகளுஞ் செழிக்க. – அருட்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo