Evvannamaka Kartharae- எவ்வண்ணமாக கர்த்தரே

Deal Score-1
Deal Score-1

எவ்வண்ணமாக, கர்த்தரே,
உம்மை வணங்குவேன் ?
தெய்வீக ஈவைப் பெறவே
ஈடென தருவேன் ?

அநேக காணிக்கைகளால்
உம கோபம் மாறுமோ ?
நான் புண்ணிய கிரியை செய்வதால்
கடாட்சம் வைப்பிரோ ?

பலியின் ரத்தம் வெள்ளமாய்
பாய்ந்தாலும் , பாவத்தை
நிவிர்த்தி செய்து சுத்தமாய்
ரட்சிக்கமாட்டாதே.

நான் குற்றவாளி , ஆகையால்
என்பேரில் கோபமே
நிலைத்திருந்து சாபத்தால்
அளித்தால் நியாயமே .

ஆனால் என் பாவம் சுமந்து
ரட்சகர் மரித்தார்;
சாபத்தால் தலை குனிந்து
தம் ஆவியை விட்டார்.

இப்போதும் பரலோகத்தில்
வேண்டுதல் செய்கிறார் ;
உம திவ்விய சந்நிதானத்தில்
என்னை நினைக்கிறார் .

இவ்வண்ணமாக கர்த்தரே ,
உம்மை வணங்குவேன்
என் நீதி இயேசுகிறிஸ்துவே ,
அவரைப் பற்றினேன்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo