Intha Mangalam selikavae Lyrics -இந்த மங்களம் செழிக்கவே

Deal Score0
Deal Score0

இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும்
எங்கள் திரித்துவ தேவனே
சுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தை
கந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து

1. ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மை
ஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்
நீதி வரம் நாலுங்கொடுத்தாய் – பெற்றுப் பெறுகி
நிற்க உலகத்தில் விடுத்தாய்
மாதவா் பணியும் வேத போதனே அந்தப்படி உன்
ஆதரவைக் கொண்டு அதன் நீதியை நம்பிப்புரிந்த

2. தக்க ஆபிரகாமும் விண்டனன் – அதனை மன
துக்குள் எலியேசா் கொண்டனன்
முக்ய ஆரான் நிலத்தண்டினன் – நினைத்தபடி
சக்கியமதாகக் கண்டனன்
பக்குவம் உரைத்திடா ரெபேக்காளும் ஈசாக்குவுக்கு
தக்க மணவாளியாகத் தந்து தயை செய்தாற்போல

3. சத்திய வேதத்தின் வாசனே – அருளுபரி
சுத்த சுவிசேட நேசனே
பக்தர்கள் பவ விமோசனே – பழுதணுவும்
அற்ற கிறிஸ்தேசுராஜனே
வெற்றியால் யாக்கோபுவுக்கு முற்றிலும் அளித்த பேறாய்
புத்திர சம்பந்துண்டாக்கி நித்திய சுப சோபனமாய்

https://www.worldtamilchristians.com/immaanarku-ummarul-eeyum-lyrics-%e0%ae%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3/
The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo