
Intha Vealai Vanthu Varam – இந்த வேளை வந்து வரம்
பல்லவி
இந்த வேளை வந்து வரம் தந்தாள் ஐயனே!
1. தேவாதி தேவனே! திரு மனுவேலனே! தேவா!
சிறியேனைக் கண்பாராய் நின் தீன தயை கூராய்!
ஜெயசீலா தேவபாலா மனுவேலா வரம்தா! – இந்த
2. எத்தனையோ தரம் ஏழை நான் செய்த பாவம் – தேவா
அத்தனையும் நீக்கி அடியேனைக் கைதூக்கி – எனை
ஆள கிருபை சூழ நல்லவேளை வந்ததே! – இந்த
3. பாவிகளை ரட்சிக்க பாருல குதித்தவா – ஏழைப்
பாவியெனை யன்பாய் படிதனில் நற்பண்பாய் – உனைப்
பாட நிதந்தேட பாதையோட கிருபைசெய் – இந்த
4. இரட்சண்ய சேனையார் செய் எத்தொழிலானாலும் – நின்
சிகரமே விளங்க! திருமறை துலங்க, ஜெக
தீசா பாவநாசா உனின் தாசர்க் கருள் தா! – இந்த