இவ்வேழைக்காக பலியான – Ivvealaikaaga Baliyana

Deal Score+1
Deal Score+1

இவ்வேழைக்காக பலியான – Ivvealaikaaga Baliyana

1.இவ்வேளைக்காக பலியான
என் யேசுவின் மகா தயை,
நான் என்றும் நிற்கத்தக்கதான
உறுதியான கன்மலை;
விண்மண் ஒழிந்தும், இதுவே
அசைவில்லாமல் நிற்குமே.

2.அவர் அனைவருக்குமாக
மீட்கும் பொருளைத் தந்தாரே;
குணப்படும் எல்லாருக்காக
பாவமன்னிப்புண்டாகுமே
ஆ! யேசுவால் உண்டானது
அளவில்லாத தயவு.

3.ஆ! அவருக்குப் பக்தியாக
நான் என்னை ஒப்புவிக்கிறேன்;
திகில் என் பாவங்களுக்காக
வந்தால், அவரை நோக்குவேன்;
அப்போதவர் என் பேரிலே
இரக்கமாய்க் கண்வைப்பாரே.

4.இம்மண்ணில் துன்பம் தொல்லையாலும்
நான் மெத்த வாதிக்கப்பட்டால்
தினம் பல வருத்தத்தாலும்
என் பாரம் மிகுதியானால்
என் யேசுவின் இரக்கமே
என் ஆத்துமத்தைத் தேற்றுதே.

5.நான் ஜீவனோடிருக்குமட்டும்
கர்த்தாவே நீர் என் நம்பிக்கை;
என் விசுவாசம் உம்மைப்பற்றும்,
இதே என் பிரதிக்கினை;
ஆம் என் அடைக்கலம் நீரே
இரக்கமுள்ள யேசுவே.

Ivvealaikaaga Baliyana song lyrics in English

1.Ivvealaikaaga Baliyana
En Yesuvin Maha thayai
Naan Entrum Nirkathakkathana
Nruthiyaana Kanmalai
Vinman Olinthum Ithuvae
Asaivillamal Nirkumae

2.Avar Anaivarukkumaga
Meetkum Porulai Thantharae
Gunapadum Ellarukkaga
Paavamannipu Undagumae
Ah Yesuvaal Undanathu
Alavillatha Thayavu

3.Aa Avarukku Bakthiyaga
Naan Ennai Oppuvikkirean
Thigil En Paavangalukaga
Vanthaal Avarai Nokkuvean
Appothavar En Pearilae
Erakkamaai Kan vaipparae

4.Immannil Thunbam Thollaiyalum
Naan Meththa Vaathikkapattaal
Thinam Pala Varuththaalum
En Paaram Miguthiyanaal
En Yesuvin Erakkamae
En Aathumaththai Theattruthe

5.Naan Jeevanodirukkam Mattum
Karthavae Neer En Nambikkai
En visuvaasam Ummai Pattrum
Ithae En pirathikkinai
Aam En Adaikkalam Neerae
Erakkamulla Yesuvae

1. இவ்வேழைக்காக பலியான
என் இயேசுவினுட தயை
நான் என்றும் நிற்கத்தக்கதான
உறுதியான கன்மலை
விண் மண் ஒழிந்தும் இதுவே
அசைவில்லாமல் நிற்குமே.

2. ரட்சிக்கப்படுவதற்காக
இரக்கமாய்த் தயாபரர்
நரரின் மனதை நன்றாக
தட்டிக்கொண்டேயிருப்பவர்
அதேனென்றால் இரட்சகர்
அனைவரையும் மீட்டவர்.

3. அவர் அனைவருக்குமாக
மீட்கும் பொருளைத் தந்தாரே
குணப்படும் எல்லார்க்குமாக
பாவமன்னிப்புண்டாகுமே
ஆ, இயேசுவால் உண்டானது
அளவில்லாத தயவு.

4. ஆ, அவருக்குப் பக்தியாக
நான் என்னை ஒப்புவிக்கிறேன்
திகில் என் பாவங்களுக்காக
வந்தால், அவரை நோக்குவேன்
அப்போதவர் என் பேரிலே
இரக்கமாய்க் கண்வைப்பாரே.

5. வேறாறுதல் எல்லாம் போனாலும்
வேறெதுவும் என் ஆவிக்கு
ஆறுதலைக் கொடாவிட்டாலும்
நான் அவரண்டை சேர்வது
என் நோவை முற்றும் ஆற்றுமே
இரக்கம் அவரில் உண்டே.

6. இம்மண்ணில் தொந்தரையினாலும்
நான் மெத்த வாதிக்கப்பட்டால்
தினம் பல வருத்தத்தாலும்
என் பாரம் மிகுதியானால்
என் இயேசுவின் இரக்கமே
என் ஆத்துமத்தைத் தேற்றுதே.

7. நான் எந்த நன்மையைச் செய்தாலும்
அதில் என் பலவீனத்தை
நான் கண்டுணருவதினாலும்
நான் ஏங்கும்போதென் மனதை
என் இயேசுவின் இரக்கமே
திரும்பத் தேற்றிக்கொள்ளுதே.

8. நான் உயிரோடிருக்குமட்டும்
நீர் கர்த்தரே, என் நம்பிக்கை
என் விசுவாசம் உம்மைப் பற்றும்
இதே என் பிரதிக்கினை
எனதடைக்கலம் நீரே
இரக்கமுள்ள இயேசுவே.

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo