Kathiravan Ezhukintra Kaalayil – கதிரவன் எழுகின்ற காலையில்

Deal Score0
Deal Score0

1. கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்
துதி செய்ய மனமே – எழுந்திராய்.

2. வறண்டு தண்ணீர் அற்ற வனம் இந்தப் புவிதனில்
திரண்ட தயை தேவை- நாடுவேன்.

3. கடவுளின் வல்லமை,கன மகிமை காணும்
இடமதில் செல்வதே – என் இஷ்டம்.

4. ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலை
ஆவலாய் நாடி நான் – போற்றுவேன்.

5. ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தை
நேயமாய் பாடி நான் – உயர்த்துவேன்.

6. மெத்தையில் ராச்சாமம் நித்திரை கொள்கையில்
கர்த்தரின் செயல்களை – சிந்திப்பேன்.

7. அல்லும் பகலும் நான் அவர் செட்டைகளின் கீழ்த்
தொல்லைக்கு நீங்கியே – ஒதுங்குவேன்.

8. ஆத்துமம் தேவனை அண்டிக் கொள்ள அவர்
நேத்திரம்போல் என்னைக் – காக்கிறார்.

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo