Mannil vantha vinnin maniyae song lyrics – மண்ணில் வந்த விண்ணின் மணியே
Mannil vantha vinnin maniyae song lyrics – மண்ணில் வந்த விண்ணின் மணியே
மண்ணில் வந்த விண்ணின் மணியே
தெய்வ கன்னி தந்த தங்க நிலவே
மலர் கண்ணில் வந்த கண்ணின் மணியே
என் நேரில் வந்த தெய்வ மகனே – (2)
ஆராரோ ஆரீரரோ….ஆராரோ ஆரீரரோ (2)
வான் மேகமே வான் மேகமே
வந்திங்கு கூடுங்களே
சேய் போலவே வான் தேவனே
வந்திங்கு பிறக்கின்றாரே
மந்தை குடிலில் மலர்ந்த ரோஜா
மண்ணில் துன்பம் போக்கும் ராஜா
அமுதமே என் செல்லமே
அற்புத குழந்தை இயேசுவே – (2)
ஆராரோ ஆரீரரோ….ஆராரோ ஆரீரரோ (2)
வான் தூதரே வான் தூதரே
வந்திங்கு பாடுங்களே
நான் பாடவே தேன் கானமே
தந்திங்கு போற்றுங்களே
கருணை வடிவில் வளர்ந்த ரோஜா
பண்பில் அகிலம் போற்றும் ராஜா
பாலனே என் வேந்தனே
அற்புத குழந்தை இயேசுவே – (2)
ஆராரோ ஆரீரரோ….ஆராரோ ஆரீரரோ (2)
(மண்ணில் வந்த….)
(ஆராரோ ஆரீரரோ….)