ஒன்றுமில்லப்பா நான் – Ondrumillappa Naan song lyrics
ஒன்றுமில்லப்பா நான்
வெறுமையான பாத்திரம்
உம்மை தான் நம்பி வாழ்கிறேன்
கரங்களில் பொறித்தவரே
தோளில் சுமக்கின்றிரே
அனாதையாவதில்லை
மறக்கப்படுவதும் இல்லை
1.அலைகள் சூழ்ந்த போதும்
மூழ்கி போகவில்லை
அக்கினி சூழ்ந்த போதும்
எரிந்து போகவில்லை
திராணிக்கு மேலாகவே
சோதிக்க விடவில்லையே (என்னை)
2.உண்மை நம்பின யாரும்
வெட்கமாய் போனதில்லை
உண்மை தேடின யாரும்
கைவிடப்படுவதில்லை
வார்த்தையில் உண்மையுள்ள
தெய்வம் நீர் மாத்திரமே
3.அழைப்பும் பெரிதானதே
தரிசனம் தந்தவரே
ஊழிய பாதையிலே
சித்தம் நிறைவேற்றுமே
சிலுவை சுமந்தவனாய்
உண்மையே பின்செல்லுவேன்
21. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.
22. தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
And she shall bring forth a son, and thou shalt call his name JESUS: for he shall save his people from their sins.Now all this was done, that it might be fulfilled which was spoken of the Lord by the prophet, saying,
மத்தேயு : Matthew:1:21,22
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்