
Paralogame Ummai Thuthipadal – பரலோகமே உம்மைத் துதிப்பதால்
பரலோகமே உம்மைத் துதிப்பதால்
கர்த்தாவே அங்கே வாழ்கிறீர்
உம் ஆலயத்தில் உம்மைத் துதிக்கிறோம்
கர்த்தாவே எழுந்தருளும்
துதிக்கிறோம் துதிக்கிறோம்
ஒன்றாக கூடித் துதிக்கிறோம் –2 அல்லேலுயா
1. உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில்
அங்கே வாசம் செய்வீர் –2 துதிக்கிறோம்
2. உம்மைப்போல் ஒரு தெய்வம் இல்லை
சர்வ சிருஷ்டிகரே –2 துதிக்கிறோம்
3. துதியும் கனமும் மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம் –2 துதிக்கிறோம்