Parisuthaavi Neer Vaarum – பரிசுத்தாவி நீர் வாரும்

Deal Score0
Deal Score0

பல்லவி

பரிசுத்தாவி நீர் வாரும்!-திடப்
படுத்தல் பெறுவோர்க் கருள் தாரும்!-இன்று

அனுபல்லவி

அருளினைப் பெருக்கும் அக்கினி மயமே
ஆவியின் நற்கனி நல்குமா தூயமே. – பரி

சரணங்கள்

1. செயல்குண வசனத் தீதுகள் போக,
திருச்சபை யதிலிவர் பூரணராக,
ஜெயமொடு பேயை எதிர்த்துக் கொண்டேக,
ஜெபதப தியானஞ் செய்வதற்காக. – பரி

2. நற்கருணைதனை நலமுடன் வாங்க,
நாளொரு மேனியாய் ஆவியி லோங்க,
சற்குணராய் இவர் சபையைக் கை தாங்க,
சகல தீதான பேதங்களும் நீங்க. – பரி

3. அஞ்ஞானங்க ளோடிவர் சமர்புரிய,
அருண்மறை யதினாழங் களையறிய,
நெஞ்சினில் அன்பு கொழுந்துவிட் டெரிய,
நின்னடியாரிவ ரென்பது தெரிய. – பரி

4. பக்தியுந் தாழ்மையுமா யிவர் உய்ய,
பரிசுத்தமான ஜீவியஞ் செய்ய,
நித்தமுங் கிருபையின் கனி கொய்ய,
நிலைவரமாய் இவராவியில் துய்ய. – பரி

5. தினமறை யோதி ஜெபித்து மன்றாட,
திருச்சபை யதின்ஐக் கியத்தினிற் கூட,
உணர்வோடு தொழுது கீதங்கள் பாட,
உள்ளந் திருந்து ஜீவாறுகளோட. – பரி

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo