
Parisuthaavi Neer Vaarum – பரிசுத்தாவி நீர் வாரும்
பல்லவி
பரிசுத்தாவி நீர் வாரும்!-திடப்
படுத்தல் பெறுவோர்க் கருள் தாரும்!-இன்று
அனுபல்லவி
அருளினைப் பெருக்கும் அக்கினி மயமே
ஆவியின் நற்கனி நல்குமா தூயமே. – பரி
சரணங்கள்
1. செயல்குண வசனத் தீதுகள் போக,
திருச்சபை யதிலிவர் பூரணராக,
ஜெயமொடு பேயை எதிர்த்துக் கொண்டேக,
ஜெபதப தியானஞ் செய்வதற்காக. – பரி
2. நற்கருணைதனை நலமுடன் வாங்க,
நாளொரு மேனியாய் ஆவியி லோங்க,
சற்குணராய் இவர் சபையைக் கை தாங்க,
சகல தீதான பேதங்களும் நீங்க. – பரி
3. அஞ்ஞானங்க ளோடிவர் சமர்புரிய,
அருண்மறை யதினாழங் களையறிய,
நெஞ்சினில் அன்பு கொழுந்துவிட் டெரிய,
நின்னடியாரிவ ரென்பது தெரிய. – பரி
4. பக்தியுந் தாழ்மையுமா யிவர் உய்ய,
பரிசுத்தமான ஜீவியஞ் செய்ய,
நித்தமுங் கிருபையின் கனி கொய்ய,
நிலைவரமாய் இவராவியில் துய்ய. – பரி
5. தினமறை யோதி ஜெபித்து மன்றாட,
திருச்சபை யதின்ஐக் கியத்தினிற் கூட,
உணர்வோடு தொழுது கீதங்கள் பாட,
உள்ளந் திருந்து ஜீவாறுகளோட. – பரி