
Siluvai Marathandai Vanthean – சிலுவை மரத்தண்டை வந்தேன்
Siluvai Marathandai Vanthean – சிலுவை மரத்தண்டை வந்தேன்
Lyrics:
சிலுவை மரத்தண்டை வந்தேன்
சிந்தையில் உம்மன்பைக் கண்டேன்
சத்தியம் உரைத்திட்ட சாந்தமே
நித்திய ஜீவனின் அச்சாரமே – உம்மைச்
சிலுவையில் அறைந்திட்டதென் பாவமே!
மன்னித்து மறந்தருளும் எனக்கு
மீட்பின் ஒளி காட்டும்!
சொல்லால் நான் செய்த பாவம் – உம்மைக்
கொல்லாமல் கொன்றதே – என் பரிகாசம்
சொல்லொணாத் துயரத்தோடழுதீர்
சொல்லியும் கேளாமல் போனேன்!
மன்னித்து மறந்தருளும் எனக்கு
மீட்பின் ஒளி காட்டும்!
கோபத்தால் நான் செய்த பாவம் – என்னால்
தூசிக்கப்பட்டதே உம் நாமம்
சோர்வால் துவண்ட தேகம்
சாய்ந்ததே பலமுறை என்னால்
மன்னித்து மறந்தருளும் எனக்கு
மீட்பின் ஒளி காட்டும்!
உம்மையே தந்திட்ட பின்னும் – நான்
தூய்மையை இழந்ததால் – உம்மை
ஈட்டியால் குத்தத் துணிந்தேன்
துக்கத்தால் கதறினீர் “தாகம் “
மன்னித்து மறந்தருளும் எனக்கு
மீட்பின் ஒளி காட்டும்!
Meetpin oli|Good Friday Tamil Songs
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்
- En Mulangaalukkum En Kanneerukkum song lyrics – என் முழங்காலுக்கும்
- Goppa Krupa Telugu christian song lyrics – గొప్ప కృప మంచి కృప
- Unnil Pazhuthu Ondrumillai song lyrics – உன்னில் பழுது ஒன்றுமில்லை
- Uyir Enge Entru Ennai Yaarum song lyrics – உயிர் எங்கே என்று என்னை