SILUVAIYIL THONGIYAVAR – சிலுவையில் தொங்கியவர்

Deal Score0
Deal Score0

SILUVAIYIL THONGIYAVAR – சிலுவையில் தொங்கியவர்

சிலுவையில் தொங்கியவர் – நீர் மரணத்தை ஜெயித்தவர் -2

எனக்காக சிலுவை சுமந்தீர்
எனக்காக இரத்தம் சிந்தினீர்
எனக்காக வாரினாள் அடிபட்டீர்
எனக்காக முள்முடி சூட்டப்பட்டீர்
பாவ சாபம் உடைத்திடவே
என் தண்டனைகளை எடுத்திடவே
மீறுதலை மன்னித்திடவே வியக்குலமாக மாறினீரே – சிலுவை

சிலுவையில் ஆனியால் அடிக்கப்பட்டீரே என்மேல் நீர் வைத்த அன்பினாலே
உழுத நிலம் போல உருக்குலைந்து போனீரே
என் வாழ்வை அழகாக்கவே
எல்லாம் முடிந்தது என்று சொன்னீரே எனக்கு ஆரம்பத்தை கொடுத்தீரே – சிலுவையில்

நீதிமான் உம்மை குற்றப்படுத்திட
கள்ளன் பரபாசை விடுவித்தாரே
யூத ராஜாவாய் இயேசு நீர் இருக்க ராயனை பின்பற்றி போனாரே
கல்வாரி அன்பை அறியவில்லை
ஐந்து காயங்களை புரியவில்லை- சிலுவையில்

உம் ஆவியை நீர் ஒப்புக்கொடுத்தீரே ஆலயத்தின் திரைச்சீலை பிழப்பட்டதே
நியாயப்பிரமாணம் மாற்றிவிட்டீரே
ஆலயத்தில் என் பாதம் பட்டு விடவே
உம் பிள்ளையாய் நான் மாறிட இத்தனை கோலமா என் இயேசுவே – சிலுவையில்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo