
Tharunam Eethun Kaatchi Saala – தருணம் ஈதுன் காட்சி சால
பல்லவி
தருணம் ஈதுன் காட்சி சால
அருள்; அனாதியே,-திவ்ய-சருவ நீதியே.
சரணங்கள்
1. கருணை ஆசன ப்ரதாப
சமுக சன்னிதா,-மெய்ப்-பரம உன்னதா! – தருணம்
2. பரர் சுரநரர் பணிந்து போற்றும்
பரம நாயகா,-நின்-பக்தர் தாயகா! – தருணம்
3. உன்னதத்திருந் தென்னை ஆளும்
ஒரு பரம்பரா,-நற்-கருணை அம்பரா! – தருணம்
4. அரிய வல்வினை தீப்பதற்குற
வான தட்சகா,-ஓர்-அனாதி ரட்சகா! – தருணம்
5. அலகைநரகை அகற்றி, முழுதும்
அடிமை கொண்டவா,-என்-தருமை கண்டவா! – தருணம்
6. தினந்தினம் நரர்க் கிரங்கும், இரங்கும்,
தேவ பாலனே,-இம்-மானுவேலனே. – தருணம்