
உன்னதத்திற்குப் பரற்கு மகிமை – Unnathathirku pararkkku Magimai
உன்னதத்திற்குப் பரற்கு மகிமை – Unnathathirku pararkkku Magimai
உன்னதத்திற்குப் பரற்கு மகிமை உலகிற் சமாதானம்
இந்நில மானிடர் மேல்பிரியம் இன்றென்றும் உண்டாக
வான பரன்மகிமை பவத்தால் மறைந்த தாயிருக்கப்
பானொளிபோற் சுதனார் பிறந்தார் பாவ இருள் நீக்க
பாவத்தினால் புவிக்கும் பார்க்கும் பலத்து நின்ற யுத்தம்
தாவீதின் சிற்றூரில் பிறந்தோர் தக அமர்ந்தினரே
மானிடனாய் பிறந்த சுதன்மேல் வைத்திடுங் கண்ணதற்கு
ஈன மானிடர்மேல் பிரியம் இன்றே உண்டாயினதே