Uyarparanil Uthitha thellam – உயர்பரனில் உதித்ததெல்லாம்

Deal Score0
Deal Score0

உயர்பரனில் உதித்ததெல்லாம்

சரணங்கள்

1.உயர்பரனில் உதித்த தெல்லாம் உலகதனை ஜெயிக்கு மன்றோ?
உயிருள மெய்விசுவாசமே உலகை ஜெயிக்கும் ஜெயமே.

2.ஏசுதெய்வ சுதனென்றே ஏற்க விஸ்வாசிப்பவனே
மாசு நிறை உலகதனை மறுத்தவர்போல் ஜெயிப்பவனே.

3.தற்பரனார் தருஞ்சாட்சிதஞ்சுதனைக் குறிக்குமென்றோ?
பொற்புறுமிக் சாட்சியமே புவிதனக்கு மேலாமே.

4.நித்தியனார் நமக்கீந்த நித்தியமாஞ் சீவனது
நித்தியராந் தஞ் சுதனுள் நிலைத்துளதாம் அச்சாட்சி.-

5.திருச்சுதனார் தமையுடையோன் பெருக்கமுறும் ஜீவனுளோன்
கருணையுளார் தமையற்றோன் சிறிதளவுஞ் ஜீவனற்றோன.

6.நீடுழி பிழைப்பவரே நீசரும்மில் பிழைத்தென்றும்
பாடற்றெம் அகமகிழ பரிவொடெமைப் பாருமையா.

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo