Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
பல்லவி:
உயிராக, நலமாக இறைவா நீ வா -இந்த
உலகோரின் நிலை கண்டு உடனே நீ வா
அனுபல்லவி:
நோயோடும் சாவோடும் போராடிடும் -உன்
சேயோருக்காய் மீண்டும் பிறந்திங்கு வா
சரணம் 1:
எண்ணற்ற எளியோர்க்கு வேலை இல்லை -அவர்
எதிர்காலம் புரியாத புதிராகுதே
மண்மீது நீ வந்த பொன்னாளையே
மன
மகிழ்வோடு கொண்டாடும் நிலையில்லையே
கோரஸ்:
ஆலயம் போகமுடியவில்லை- அங்கு
அழுதே தொழுதிட வழியுமில்லை
பள்ளிகள் இல்லை பயணம் இல்லை –
இதுவரை இது போல் பார்த்ததில்லை
சரணம் 2:
மதம் சாதி எனப் பேசி தீ மூட்டியே – நம்
மனம் தேடும் மனிதத்தை ஏன் கொல்லுவார்?
உழுதுண்டு உழைக்கின்ற விவசாயிகள் -இங்கு
சாவொன்றே தீர்வென்று ஏன் எண்ணுவார்?
கோரஸ்:
நீதியின் தேவதை குரல் இழந்து- இங்கு
நிற்கின்றாரே கண் சிவந்து
பணியாளருக்கு கைவிலங்கு
எங்கள்
மனதிற்கு இல்லை ஒரு மருந்து
சரணம் 3:
திண்டாடும் உலகத்தை மீட்கத் தானே- இந்த
மண் மீது ஏழை போல் நீ தோன்றினாய்
அன்றாடம் கவலைகள் கண்ணீருமாய் – இங்கு
அலைமோதும் உன் மக்கள் நிலை பார்த்து வா
கோரஸ்:
நீ சொல்லி நீங்காத் துயரும் இல்லை – என்றும்
நீ சொல்லி அடங்காப் புயலும் இல்லை
தூக்கம் கலைந்து நீ எழுந்து – எம்
துயரம் போக்க வா இறைவா
கிறிஸ்து பிறப்பு தியானப் பாடல்