ஆதியிலே பரத்திலிருந்த வார்த்தை – Aathiyilae Parathiliruntha Vaarthai

Deal Score0
Deal Score0

ஆதியிலே பரத்திலிருந்த வார்த்தை – Aathiyilae Parathiliruntha Vaarthai

ஆதியிலே பரத்திலிருந்த வார்த்தை
அன்பு காட்ட இறங்கி வந்த வார்த்தை -2
அந்த வார்த்தை, தேவ வார்த்தை
தேவனிலிருந்து வந்த வார்த்தை
இயேசுதானே அந்த வார்த்தை
ஜீவபலியாய் வந்த வார்த்தை – ஆதியிலே

1. முப்பத்தெட்டு வருடமாக முடங்கிக்கிடந்தான்
சுகமே இல்லாம சூம்பி கிடந்தான்
மதமோ, சடங்கோ காக்க முடியல
பெதஸ்தா பெயரிலும் பிரயோஜனமில்ல -2
வார்த்தை வந்தது எழும்ப சொன்னது- அவன்
படுக்கையை எடுத்துகிட்டு கெளம்ப சொன்னது -2 –ஆதியிலே

2. பண்ணிரெண்டு வருடமாக பெரும்பாடு பட்டாள்
உதிர ஊரல் நிக்காம வேதனை பட்டாள்
பணமோ, ஜனமோ காக்க முடியல
வைத்தியரால் கூட தீர்க்க முடியல
வார்த்தைய கேட்டாள் ஆடைய தொட்டாள்
விடுதலையடைந்து வாழ்த்துப்பெற்றாள் -2. -ஆதியிலே

3. ஆறுதலா கூட வாழ புருஷனுமில்ல
நம்பிக்கையே ஓரே ஒரு வாலிபப்புள்ள
சாதி சனம் சொந்த பந்தம் உதவி செய்யல
அற்ப ஆயுசில் போனானே அந்த பயபுள்ள -2
வார்த்தை வந்தது பாடைய தொட்டது
நாயினூர் விதவைக்கு வாழ்வு தந்தது -2 -ஆதியிலே

Aathiyilae Parathiliruntha Vaarthai song lyrics in english

Aathiyilae Parathiliruntha Vaarthai

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo