
சுவிசேஷத்தைக் கேட்பீரே-Suvisheththai Keatpeere
பல்லவி
சுவிசேஷத்தைக் கேட்பீரே
சுதன் இயேசுவை ஏற்பீரே
சரணங்கள்
1. நம் பாவங்கட்காகவே இம் மானிலம் வரவே
சிலுவையைச் சுமந்தாரே
ஜீவனையும் ஈந்தாரே – சுவி
2. நானே வழியும் சத்தியமும் ஜீவனுமே என்றாரே
அவராலே யன்றி நித்திய
ஜீவனில்லை என்றாரே – சுவி
3. வருத்தப்பட்டுப் பாரமே சுமப்பவர்கள் யாவரும்
வருவீரே என்னிடமே
தருவேன் இளைப்பாருதலே – சுவி
4. முள் முடியுடன் சிலுவையிலே முடிந்தது எல்லாம் என்றாரே
உள்ளத்தில் விசுவாசித்தால் வல்ல
இரட்சிப்பைப் பெறுவாய் – சுவி
5. இவ்வளவு பெரிதான இரட்சிப்பை அறியாது
கவலையற்றிருப்போரே
தண்டனைக்குத் தப்புவீரோ? – சுவி
யோவான் 10:9 (John 10:9)
நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
யோவான் 14:6 (John 14:6)
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.